ADDED : ஆக 06, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்
புளியம்பட்டி அடுத்த, கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய
தோட்டத்தின் அருகே, நேற்று மாலை மேய்ச்சல் நிலத்தில் ஆங்காங்கே ஆறு
வெள்ளாடுகள் இறந்து கிடந்தன. இதையடுத்து, புன்செய் புளியம்பட்டி
போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில்,
கள்ளிப்பாளையத்தை சேர்ந்த அருள், 50, என்பவர் அதே பகுதியில் விவசாய
நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கால்நடை தீவனமான மசால் பயிர் சாகுபடி
செய்துள்ளார். யூரியா உரம் தெளிக்கப்பட்ட பயிரில், வெள்ளாடுகள்
மேய்ச்சலில் ஈடுபட்டதால், ஜெ.ஜெ. நகரை சேர்ந்த பாப்பாத்தி, ரமேஷ்,
கோபால், பூவாள், சசிகுமார் ஆகியோருக்கு சொந்தமான, 6 வெள்ளாடுகள்
உயிரிழந்தது தெரிய வந்தது.
