ADDED : அக் 18, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சந்தைக்கு வரத்தான 650 மாடுகள்
ஈரோடு, அக். 18-
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு மாடுகளை அழைத்து
வந்திருந்தனர்.
இதில், 7,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பிலான, 50 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வரை கலப்பின மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மாடுகளை விற்பனை செய்யவும், மாடுகளை வாங்கி செல்லவும் விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். இதனால் நேற்று, 90 சதவீத மாடுகள்
விற்பனையாகின.