/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவர் சந்தைகளுக்கு 73 டன் காய்கறி வரத்து
/
உழவர் சந்தைகளுக்கு 73 டன் காய்கறி வரத்து
ADDED : பிப் 10, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, சத்தி, கோபி, தாளவாடியில் உழவர் சந்தை செயல்படுகிறது. இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு விடுமுறை தினமான நேற்று, 32.54 டன் காய்கறி, பழம் வரத்தாகி விற்றது.
இதன் மதிப்பு, 12.11 லட்சம் ரூபாய். மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளுக்கும், 73.84 டன் காய்கறி, பழம் வரத்தாகி, 27.40 லட்சம் ரூபாய்க்கு விற்றது.