ADDED : செப் 30, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளில், 73.23 டன் காய்கறிகள் விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 29.14 டன் காய்கறிகள், 10 லட்சத்து, 27 ஆயிரத்து, 909 ரூபாய்க்கு விற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளுக்கு வரத்தான, 73.23 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள், 25 லட்சத்து, 58 ஆயிரத்து, 701 ரூபாய்க்கு விற்றது என, உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.