sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சொத்தை கேட்டு 74 வயது தாய் கொலை மனைவியுடன் பாசக்கார மகன் கைது

/

சொத்தை கேட்டு 74 வயது தாய் கொலை மனைவியுடன் பாசக்கார மகன் கைது

சொத்தை கேட்டு 74 வயது தாய் கொலை மனைவியுடன் பாசக்கார மகன் கைது

சொத்தை கேட்டு 74 வயது தாய் கொலை மனைவியுடன் பாசக்கார மகன் கைது


ADDED : மார் 13, 2024 01:58 AM

Google News

ADDED : மார் 13, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்:நம்பியூர் அருகே வெள்ளகோவில்பாளையத்தை சேர்ந்தவர் கருணாம்பாள், ௭௪; கணவர் சடையப்பா கவுண்டர், 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களின் மகன்கள் வடிவேல், நாமதேவன். அரசு பஸ் டிரைவராக வடிவேல் பணிபுரிகிறார். நாமதேவன் அதே பகுதியில் விவசாயம் செய்கிறார். இவருடன் தோட்டத்தில் தனி வீட்டில் கருணாம்பாள் வசித்தார். சில ஆண்டுகளாக நாமதேவன், மருமகள் இந்துமதி, சொத்து குறித்து அடிக்கடி கருணாம்பாளுடன் தகராறு செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இரு தரப்புக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கருணாம்பாளை இருவரும் தள்ளியதில், வீட்டு இரும்பு கதவில் மோதி விழுந்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வடிவேலுக்கு தகவல் தந்துள்ளனர். இதனால் பணியிலிருந்தவர், வேறு டிரைவரை மாற்றிவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்துள்ளார். கருணாம்பாள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நம்பியூர் போலீசுக்கு தகவல் தந்தார்.

இன்ஸ்பெக்டர் நிர்மலா, எஸ்.ஐ., சண்முகம் ஆகியோர், நாமதேவன், ௪௫; இந்துமதி, ௨௯, தம்பதியிடம் விசாரித்தனர். தகராறில் தள்ளிவிட்டபோது இரும்பு கதவில் மோதி இறந்ததை ஒப்புக் கொண்டனர். இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us