sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டு தயாரிப்பு பணி

/

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டு தயாரிப்பு பணி

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டு தயாரிப்பு பணி

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டு தயாரிப்பு பணி


ADDED : டிச 27, 2024 01:27 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 27-

ஈரோட்டில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 75 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு, வ.உ.சி., பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வரும், 30ல் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியன்று, சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்தாண்டு, கோவில் வார வழிபாட்டு குழு சார்பில், அனுமன் ஜெயந்தியன்று வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 75 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது.

இது குறித்து, வார வழிபாட்டு குழு தலைவர் குமார், செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது: கடந்த, 24 மாலை முதல் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், 38 பெண்கள் உள்ளிட்ட, 50 பேர் பணியாற்றுகின்றனர். 30 அதிகாலை, 4:30 மணி முதல் இரவு கோவில் நடை சாற்றும் வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

லட்டு தயாரிக்க, 2,400 கிலோ சர்க்கரை, 1,300 கிலோ கடலை மாவு, நெய், 60 கிலோ, முந்திரி, 40 கிலோ, திராட்சை, 240 கிலோ, ஏலக்காய் நான்கு கிலோ, எண்ணெய், 800 கிலோ கொண்டு, 75 ஆயிரம் லட்டு தயாரிக்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களுக்கு ஆரஞ்சு கயிறு வழங்கப்படுகிறது. பொட்டுக்கடலை, கல்கண்டு பிரசாதமாக வழங்கப்படும். மேலும், அனுமன் ஜெயந்தியன்று அன்னதானம் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us