ADDED : மார் 20, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 77 ஓட்-டுச்சாவடிகள் பதற்றமானவை என்று, கலெக்டர் கந்தசாமி தெரி-வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் நடந்த சம்பவங்கள் அடிப்படையில், எட்டு தொகுதியில், 55 ஓட்டுச்சவாடி மையங்-களில், 77 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அறியப்பட்டுள்-ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானதும், வேட்பாளர், அவர் சார்ந்த அமைப்புகள், வேறு ஏதாவது காரணத்தால் சில பதற்றமான ஓட்டுச்சாவடி கண்டறியப்-பட்டால், அதையும் சேர்த்து, கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
