/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கால்நடை சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
/
ஈரோடு கால்நடை சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை-களில் மாட்டுச்சந்தை நடக்கும்.
நேற்று முன்தினம் நடந்த சந்-தையில், நுாற்றுக்கும் மேற்பட்ட கன்றுகள், மாடுகளை விவசா-யிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவை, 8,000 ரூபாய் முதல், 26,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்-டுக்கல், திருவண்ணாமலை, தேனி மாவட்டங்களில் இருந்து மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர்.இதில், 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 50 கன்-றுகள்; 36,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள்; 28,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; தவிர, 65,000 ரூபாய்க்கு மேலான விலையில், கலப்பின மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர். நேற்று வரத்தான மாடு-களில், 90 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்-தனர்.