sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு சந்தைக்கு வரத்தான மாடுகளில் 90 சதவீதம் விற்பனை

/

ஈரோடு சந்தைக்கு வரத்தான மாடுகளில் 90 சதவீதம் விற்பனை

ஈரோடு சந்தைக்கு வரத்தான மாடுகளில் 90 சதவீதம் விற்பனை

ஈரோடு சந்தைக்கு வரத்தான மாடுகளில் 90 சதவீதம் விற்பனை


ADDED : டிச 27, 2024 01:03 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 27-

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு அழைத்து வந்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 60 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 70,000 ரூபாய்க்கு மேலான விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

கர்நாடகா மாநிலத்தில் கறவை மாடுகள் வாங்க, விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. இதனால் நேற்று அம்மாநில விவசாயிகள், கால்நடைத்துறை அதிகாரிகள், முகவர்களும் வந்திருந்து, 80க்கும் மேற்பட்ட மாடுகளை வாங்கி சென்றனர். பிற மாநில வியாபாரிகளும் அதிகமாக மாடுகளை வாங்கியதால் நேற்று வரத்தானவைகளில், 90 சதவீத மாடுகள் விற்பனையானது.






      Dinamalar
      Follow us