sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிளஸ் 1ல் 96.97% தேர்ச்சி மாநில அளவில் 2வது இடம்

/

பிளஸ் 1ல் 96.97% தேர்ச்சி மாநில அளவில் 2வது இடம்

பிளஸ் 1ல் 96.97% தேர்ச்சி மாநில அளவில் 2வது இடம்

பிளஸ் 1ல் 96.97% தேர்ச்சி மாநில அளவில் 2வது இடம்


ADDED : மே 17, 2025 01:10 AM

Google News

ADDED : மே 17, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டம் பிளஸ் 1 பொதுத்தேர்வில், 96.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 223 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்த, 10,754 மாணவர்கள், 12,176 மாணவியர் என, 22,930 பேர் தேர்வு எழுதினர். இதில், 10,304 மாணவர், 11,931 மாணவியர் என, 22,235 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 96.97 ஆகும். இதன் மூலம் மாநில அளவில் இரண்டாமிடத்தை பெற்றது. கடந்தாண்டைவிட, 1.41 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளது.

மாவட்ட அளவில், 113 அரசு பள்ளிகளில், 4,996 மாணவர், 6,607 மாணவியர் என, 11,603 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,663 மாணவர், 6,403 மாணவியர் என, 11,066 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர், 93.33 சதவீதம், மாணவியர், 96.91 சதவீதம் என, 95.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்திலும், ஈரோடு மாவட்டம் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

கேக் வெட்டி மாணவ, மாணவியர் கொண்டாட்டம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ௧ பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. பவானி சுற்றுவட்டார பகுதியில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார்

பள்ளிகளில், மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us