/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பேட்ஜ்' அணிந்து பணிபுரிந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்
/
'பேட்ஜ்' அணிந்து பணிபுரிந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்
'பேட்ஜ்' அணிந்து பணிபுரிந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்
'பேட்ஜ்' அணிந்து பணிபுரிந்த ஊரக வளர்ச்சி துறை ஊழியர்
ADDED : பிப் 16, 2024 10:21 AM
சென்னிமலை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் நீண்ட காலமாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணிபுரிந்தனர்.
இதேபோல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் தாலுகா அலுவலகம் முன், நம்பியூர் வட்ட கிராம உதவியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட செயலாளர் பரமசிவம், கிராம உதவியாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.