sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

/

ஈரோட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

ஈரோட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

ஈரோட்டில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்


ADDED : ஜன 01, 2026 04:52 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில், 2026 புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு முதலே களை கட்டியது.

இதற்காக பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள சி.எஸ்.ஐ., பிரப் தேவாலயத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு 10:30 மணி முதலே குவியத் தொடங்கினர். மேலும் புத்தாண்டை ஒளிபரப்பும் விதமாக, தேவாலயத்தின் முகப்பில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்து. இதையடுத்து நள்ளிரவு 12:00 மணிக்கு எல்.இ.டி., திரையில் உள்ள எண்கள் 2025ல் இருந்து, 2026க்கு மாறியது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் 'ஹேப்பி நியூ இயர்' என உற்சாக முழக்கம் எழுப்பியவாறு புத்தாண்டை வரவேற்றனர். மேலும் வானில் வண்ண பலுான்களை பறக்கவிட்டும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பின்னர், கேக்குகள் வெட்டி பகிர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்.பி., சுஜாதா தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us