sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீரப்பன்சத்திரம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

/

வீரப்பன்சத்திரம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

வீரப்பன்சத்திரம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

வீரப்பன்சத்திரம் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு


ADDED : ஜன 01, 2026 04:52 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவே கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் பறவை காவடி, வேல் காவடி, பத்து செட் அலகு, விமான அலகு, பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் கோவில் முன்பாகவும், வீடுகளிலும் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். மாவிளக்கு எடுத்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து இன்று காலை 7:33 மணிக்கு கோவிலில் கம்பம் பிடுங்குதல், 10:00 மணிக்கு அம்மன் மலர் பல்லக்கு திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. நாளை (ஜன.,2) இரவு 7:00 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us