sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மீது குற்றச்சாட்டு

/

கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மீது குற்றச்சாட்டு

கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மீது குற்றச்சாட்டு

கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல் ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் மீது குற்றச்சாட்டு


ADDED : ஏப் 22, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி, ஈரோடு கலெக்டர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:

கொடிவேரி அணை பாசன பகுதியான தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப்பகுதியில், நெல் அறுவடை நடந்து வருகிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, கொள்முதல் நிலையங்கள் (டி.பி.சி.,) செயல்படுகிறது.

நஞ்சை புரியம்பட்டியில் உள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையத்துக்கு, வீலர்களில் வந்த ஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை கட்சியை சேர்ந்த சிலர், நிதி கேட்டு பில் கிளர்க்கை மிரட்டியுள்ளனர். 'இது அரசு நிறுவனம் என்றும், நிதி வழங்க இயலாது' என கூறியுள்ளனர். இதையறிந்து சென்ற விவசாயிகள், எங்கள் சங்க நிர்வாகிகள் வீடியோ பதிவு செய்ததால் அங்கிருந்து சென்று விட்டனர். இதுபோன்ற அடாவடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us