தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பிளாட்பார்ம்; பயணிகள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 08, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணி நடக்கிறது. ஆனால் ஈரோட்டில் நான்கு பிளாட்பார்ம் மட்டுமே உள்ளது. இதில் மூன்று பிளாட்பார்ம்களில் மட்டுமே தொலைதுார ரயில் நிற்கி-றது. நான்காவது பிளாட்பார்மில் பாசஞ்சர் மட்டுமே நிற்கிறது. அதிகளவில் ரயில்கள் வந்து செல்வதால் கூடுதல் பிளாட்பார்ம் அமைக்க நீண்ட நாட்களாகவே கோரிக்கைை இருந்து வருகி-றது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது:ஈரோடுக்கு தினமும், 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு ஏற்ப பிளாட்பார்ம் எண்ணிக்கை இல்லை. இதனால் பல ரயில்கள் காவிரி ஆர்.எஸ்.பாலம், ஐ.டி.ஐ., பகுதியில் சிக்னலுக்-காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதில், 10 முதல் 20 நிமி-டங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.

சிக்னலுக்காக ரயில்கள் காத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயணிகளிடம் சமூக விரோதிகள் பணம், நகை, மொபைல் போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறித்தும், திரு-டியும் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் ரயில்வே அதி-காரிகள் கூடுதல் பிளாட்பார்ம் கோரியிருந்தனர்.

ஆனால் பல ஆண்டாக கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக ரயில்வே அதிகாரிகள் கூடுதல் பிளாட்பார்ம் அமைக்க போதிய இடவசதி இல்லை என்று கூறி வருகின்றனர். இந்நி-லையில் தான் ரயில்வே இன்ஜினியர், மாவட்ட நிர்வாகம் இணைந்து சர்வே மேற்கொண்டதில், மேலும் மூன்று முதல் ஐந்து பிளாட்பார்ம் அமைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகம், தென்-னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பியும், அனு-மதி ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ரயில்வே பொது மேலாளர் அனுமதிக்கும் பட்சத்தில் கூடுதல் பிளாட்பார்ம்கள் அமைத்தால் சர்வதேச தரத்திலான ரயில்வே ஸ்டேஷனாக ஈரோடு மேம்படும். அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கங்களும் கூட இக்கோரிக்கையை முன் வைத்து வருகின்றன.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us