ADDED : நவ 26, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு, நவ. 26-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வரும், 29ல் வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.
காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.