/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.5.48 லட்சத்துக்கு வேளாண் விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.5.48 லட்சத்துக்கு வேளாண் விளை பொருட்கள் விற்பனை
ரூ.5.48 லட்சத்துக்கு வேளாண் விளை பொருட்கள் விற்பனை
ரூ.5.48 லட்சத்துக்கு வேளாண் விளை பொருட்கள் விற்பனை
ADDED : ஜூன் 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் கிலோ, 38.62 - 63.30 ரூபாய் என, 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நெல் கிலோ, 20.85 - 25.40 ரூபாய் என, 99 ஆயிரம் ரூபாய், தேங்காய் பருப்பு கிலோ, 220.50 - 240.01 ரூபாய் என, 95 ஆயிரத்துக்கு விற்றது.
நிலக்கடலை கிலோ, 72.01 - 75.11 ரூபாய் என, 1.16 லட்சத்துக்கு விற்றது. எள் கிலோ, 95.69 - 126.59 ரூபாய் என, 1.57 லட்சத்துக்கு விற்றது. ஆமணக்கு, ஒரு மூட்டை வரத்தாகி, 1,000 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 168 மூட்டைகளில், 113.22 குவிண்டால் விளை பொருட்கள் வரத்தாகி, ரூ.5.48 லட்சத்துக்கு விற்பனையானது.