sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

/

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்


ADDED : ஜூன் 13, 2024 03:50 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 03:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க மற்றும் விற்க வருகின்றனர். இன்று கூடிய சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்சென்றனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சந்தை துவங்கிய ஐந்து மணி நேரத்தில் ஆடுகள் ரூ.1 கோடி அளவிற்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us