sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., ஓட்டுகளை கவர ஈரோட்டில் தி.மு.க., புது வியூகம்

/

அ.தி.மு.க., ஓட்டுகளை கவர ஈரோட்டில் தி.மு.க., புது வியூகம்

அ.தி.மு.க., ஓட்டுகளை கவர ஈரோட்டில் தி.மு.க., புது வியூகம்

அ.தி.மு.க., ஓட்டுகளை கவர ஈரோட்டில் தி.மு.க., புது வியூகம்

1


ADDED : ஜன 29, 2025 06:14 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டுகளை பெற முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தை களமிறக்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இவர்களது ஓட்டுகளை பெற, தி.மு.க., மற்றும் நா.த.க.,வினர், பல்வேறு வகைகளிலும் முயன்று வருகின்றனர்.

தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.க.,வில் இருந்தபோது, அக்கட்சியினர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் என பலருடனும் நட்புடன் பழகி வந்தார். அவர்களுடன் இன்றும் நட்புடன் உள்ளார். அதேபோல, பா.ஜ.,விலும் அவருக்கு நல்ல பழக்கம் உள்ளது. அதனால், அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுகளையும் குறிவைத்து, பிரசாரம் செய்து வருகிறார்.

அதேபோல, பெருந்துறையைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சராகவும், புறநகர் மாவட்ட செயலராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலம், தற்போது தி.மு.க.,வில் உள்ளார். அவருக்கும் ஈரோட்டில் செல்வாக்கு உள்ளது.

குறிப்பாக, அ.தி.மு.க.,வில் இன்றைக்கும் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., ஓட்டுகளை வெங்கடாசலம் வாயிலாக பெறும் முயற்சியில் தி.மு.க., தலைமை அவரை களம் இறக்கி விட்டுள்ளது.

இதையடுத்து, தொகுதிக்குள் முகாமிட்டிருக்கும் வெங்கடாசலம், அ.தி.மு.க.,வினரை வளைக்க அவர்களை தேடிச் செல்கிறார்.

கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அவர் பெற்ற வித்தியாசத்தை சந்திரகுமார் கடக்க வேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட முயற்சிகளை தி.மு.க., தலைமை மேற்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us