ADDED : ஏப் 20, 2025 02:28 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., மகளிரணி சார்பில், தாராபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தாராபுரம் நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
