ADDED : ஜன 27, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: ஈரோடு புறநகர் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம், பெருந்-துறை ஒன்றியம் பாண்டியம்பாளையத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்-வராஜ் வரவவேற்றார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செய-லாளர் கருப்பணன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், கட்சி அமைப்பு செயலாளர் அர்ஜுன் உட்பட பலர் பேசினர்.
பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் விஜயன், ரஞ்சித்ராஜ், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரம-ணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அருணா-சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.