/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ADDED : செப் 03, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற, மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியை, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் கந்தசாமி நேற்று துவக்கி வைத்தார். பெருந்துறை சாலை வழியாக சென்று, திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவு செய்தனர்.
இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு அரங்கை பார்வையிட்டனர். வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.