sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம் அருகே அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் களிமண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக வருத்தம்

/

காங்கேயம் அருகே அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் களிமண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக வருத்தம்

காங்கேயம் அருகே அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் களிமண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக வருத்தம்

காங்கேயம் அருகே அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரம் களிமண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக வருத்தம்


ADDED : நவ 23, 2024 03:09 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: கார்த்திகை தீப திருநாள் டிச.,௧௩ம் தேதி கொண்டாடப்படுகி-றது. இதையொட்டி அகல் விளக்குகளில் மக்கள் விளக்கேற்றி வழிபடுவர். இதை குறிவைத்து காங்கேயம், சம்பந்தம்பாளை-யத்தில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்-ளனர்.

இதுகுறித்து மண்பாண்ட கைவினை கலைஞர் சிவக்குமார் கூறி-யதாவது;நாங்கள் ஐந்தாம் தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடு-பட்டு வருகிறோம். வண்டல் மண்ணுடன் செம்மண், காற்று மண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம்.

நாளொன்றுக்கு ஆயிரம் அகல் விளக்கு வரை தயாரித்து வரு-கிறோம். இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல் விளக்கு, கோவில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையில் தயாரித்து வருகிறோம். காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகளை, விற்பனை செய்து வரு-கிறோம்.

இந்த சீசனில் மட்டும், 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய

்வோம். ஆனால், களிமண் போதிய அளவில் கிடைப்ப-தில்லை. அப்படியே கிடைத்தாலும் கொண்டு வருவதற்கு பல கெடுபிடி உள்ளது.

அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமா-னலும் களிமண் கொண்டு வர அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்-தியும் குறைந்தது.

இதனால் ஒரு லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது. மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால், ஏழை மண்-பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெறுவர்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us