/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனைத்து வணிகர் சங்க ஆண்டு குடும்ப விழா
/
அனைத்து வணிகர் சங்க ஆண்டு குடும்ப விழா
ADDED : ஏப் 30, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு::
ஈரோடு, காளிங்கராயன் பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க, மூன்றாமாண்டு குடும்ப விழா மாவட்ட துணை தலைவர் வேலா சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. சங்க தலைவர் ஞானசேகர் வரவேற்றார். செயலாளர் சரவணகுமார் ஆண்டறிக்கை, பொருளாளர் குழந்தைராஜன் வரவு-செலவை தாக்கல் செய்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாநில துணை தலைவர் திருமூர்த்தி, பொருளாளர் உதயம்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் பேசினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது.

