/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிரீன் கார்டன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை தேர்வெழுதிய அனைவரும் 525க்கு மேல் மார்க்
/
கிரீன் கார்டன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை தேர்வெழுதிய அனைவரும் 525க்கு மேல் மார்க்
கிரீன் கார்டன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை தேர்வெழுதிய அனைவரும் 525க்கு மேல் மார்க்
கிரீன் கார்டன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை தேர்வெழுதிய அனைவரும் 525க்கு மேல் மார்க்
ADDED : மே 09, 2025 01:41 AM
சென்னிமலை, சென்னிமலை-பெருந்துறை ஆர்.எஸ்.மெயின் ரோட்டில் கோரக்காட்டுவலசில் செயல்படும், கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் ௨ தேர்வில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய, 173 மாணவ, மாணவியரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். அனைவரும், 525க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவன் வேதப்ரியன், 600க்கு 593 மதிப்பெண் எடுத்து, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். 592 மதிப்பெண் எடுத்து மாணவியர் தீபிகாஸ்ரீ, ஜெயரூபா இரண்டாமிடம் பெற்றனர். 590க்கு மேல் நான்கு பேரும், 580க்கு மேல் 24 பேரும், 550க்கு மேல் 60 பேரும் மதிப்பெண் எடுத்துள்ளனர். பள்ளி சராசரி மதிப்பெண்ணாக, 525 பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியர், இதற்கு காரணமான ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு தெரிவித்தனர்.