/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2.26 ஏக்கர் நிலம் தானமாகஅளித்த அளுக்குளி விவசாயி
/
2.26 ஏக்கர் நிலம் தானமாகஅளித்த அளுக்குளி விவசாயி
ADDED : ஜன 05, 2025 01:30 AM
கோபி,கோபி அருகே புதுவள்ளியம்பாளையத்தில், வேளாண் அறிவியல் நிலையம் இயங்குகிறது.
கோபி, அளுக்குளியை சேர்ந்த விவசாயி பழனிவேல், 60; தனக்கு சொந்தமான, ௨.௨௬ ஏக்கர் நிலத்தை, வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தானமாக நேற்று வழங்கினார். அதற்கான பத்திரத்தை, அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசனிடம் வழங்கினார்.
இதுகுறித்து அழகேசன் கூறுகையில், 'இந்தியாவிலேயே முதன்முதலாக, வேளாண் அறிவியல் நிலையத்துக்கு, தானமாக நிலம் தந்த பெருமை பழனிவேலை சாரும். வேளாண் மேம்பாட்டு நடவடிக்கைக்காக குறிப்பாக புதிய விதை, நாற்றாங்கால் மற்றும் கிராம மேம்பாட்டு பணிகள், அதுசார்ந்த ஆராய்ச்சி சுற்றுச்சூழலியல், சுற்றுலா சார்ந்த கட்டுமான அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற, 2.26 ஏக்கர் நிலத்தை தானமாக தந்துள்ளார்' என்றார்.

