ADDED : ஜூன் 16, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்; கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023' காரணத்தால் சென்னை தவிர்த்த பிற மாநகராட்சி அலுவலர்கள் தகுதி இருந்தும் பதவி உயர்வின்றி ஓய்வு பெறும் அவலநிலை உள்ளதாகத் தமிழ்நாடு மாநில மாந-கராட்சி அலுவலர்
சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.உயர் பதவிகளுக்கான வாய்ப்பின்மை மற்றும் காலிப்பணியிடங்களால் ஊழியர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைத்துப் பகுதி மாநகராட்சி அலுவலர்களும் பயன்பெறும் வகையில், தற்போதைய பதவி உயர்வு விதிகளில் தமிழக அரசு உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என அதன் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் சுஜாத் அலி ஆகியோர் தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்-பியுள்ளனர்.
