/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாக்கடையில் தவறி விழுந்த முதியவர் பலி
/
சாக்கடையில் தவறி விழுந்த முதியவர் பலி
ADDED : ஆக 28, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, பாண்டியன் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி, 68; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டருகில் நடந்து சென்றார். அப்போது தடுமாறி சாலையோர சாக்கடையில் விழுந்தார்.
பலத்த காயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.