/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவரின் கால் சிதைவு
/
அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவரின் கால் சிதைவு
ADDED : அக் 20, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பஸ் சக்கரம் ஏறி முதியவரின் கால் சிதைவு
ஈரோடு, அக். 20-
ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நாகராஜன், 60; ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து மொபட்டில் நேற்று சென்றார். அவரின் பின்னால் கோவையில் இருந்து ஈரோடு வழியாக சேலம் செல்லும் அரசு பஸ் வந்தது. மொபட் மீது மோதியதில் நிலை தடுமாறிய நாகராஜன் சாலையில் விழுந்தார். அப்போது அவரது இடது கால் மீது பஸ் பின் சக்கரம் ஏறியதில் முற்றிலும் சிதைந்தது. அங்குள்ளோர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் செந்தில்குமார், 50; கண்டக்டர் லட்சுமணன், 56, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.