sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமூக சொத்து பறிபோவதை தடுக்க காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

/

சமூக சொத்து பறிபோவதை தடுக்க காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

சமூக சொத்து பறிபோவதை தடுக்க காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

சமூக சொத்து பறிபோவதை தடுக்க காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு


ADDED : ஜூன் 10, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காந்தி நகரில் பல ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்துள்ளனர். இதுபற்றி ஆவணங்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னிமலை அட்டவணை பிடாரியூரில், 250 இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஒதுக்கிய நிலத்தையும் சிலர் போலி ஆவணங்கள் மூலம் மாற்றம் செய்துள்ளனர்.

பெருந்துறை சிப்காட்டில் சாயக்கழிவு, ஆலைக்கழிவால் மாசுபாடு ஏற்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை இல்லை.

சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் மாமாங்கம் குளத்துக்கு செல்லும் பகுதியில், கனிம வள கொள்ளையை தடுக்கவும், கொள்ளை போன கனிம வளத்துக்கு இழப்பீடு பெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் பல சம்பவங்கள் மீது நடவடிக்கை கோரி, இன்று முதல் பெருந்துறை தாலுகா அலுவலகம் முன், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். பெருந்துறைக்கு முதல்வர் நாளை (11ம் தேதி) வரும் நிலையில், இந்த காத்திருப்பு போராட்டம் நல்ல தீர்வை தரும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us