/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்
/
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : ஜூலை 15, 2024 01:25 AM
ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில், 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போன வழக்கில், ஓசூர் வாலிபர் சிக்கினார்.
ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ., காலனி ஏழாவது வீதியை சேர்ந்த ஆடிட்டர் சுப்பிரமணி, 69; இவரது வீட்டில் ஜூன், 8ம் தேதி புகுந்த ஆசாமி, 235 பவுன் நகை, 48 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றார். சூரம்பட்டி போலீசார் விசாரணையில் திருட-னுக்கு உதவிய, தகவல் அளித்த அருண்குமார், விக்னேஷ், சத்யன் என மூவரை கைது செய்தனர். அவர்களிடம், 90 பவுன் நகை, 19 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு காரை பறிமுதல் செய்தனர். இந்நி-லையில் மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது: ஆடிட்டர் வீட்டில் நடந்த திருட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஒரு வாலிபர் சிக்கியுள்ளார். அவரிடம், 700 கிராம் தங்கம் சிக்கும் என கருது-கிறோம். பெங்களூரை சேர்ந்த முக்கிய குற்றவாளிக்கு இவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதில் மேலும் சிலர் சிக்குவர் என எதிர்பார்க்-கிறோம். முக்கிய குற்றவாளியை கர்நாடகாவில் முகாமிட்டு கண்-காணித்து வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.