sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணி வரன்முறை கோரி வேட்டை தடுப்பு காவலர் மனு

/

பணி வரன்முறை கோரி வேட்டை தடுப்பு காவலர் மனு

பணி வரன்முறை கோரி வேட்டை தடுப்பு காவலர் மனு

பணி வரன்முறை கோரி வேட்டை தடுப்பு காவலர் மனு


ADDED : அக் 19, 2024 01:19 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி வரன்முறை கோரி வேட்டை தடுப்பு காவலர் மனு

சத்தியமங்கலம், அக். 19-

'வேட்டை தடுப்பு காவலர் பணியை பணி வரன் முறை செய்ய வேண் டும்' என, வேட்டை தடுப்பு காவலர்கள் மனு வழங்கினர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தி வன கோட்ட அலுவலர் குலால் யோகேஷ் விலாசிடம் மனு அளித்தனர்.

அதில், சத்தி புலிகள் காப்பக சத்திவனக் கோட்டத்திற்குட்பட்ட விளாமுண்டி, பவானிசாகர், சத்தி, டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும், 59 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் பெரும்பாலானோர், பட்டியல் பழங்குடி யினத்தைச் சார்ந்தவர்கள். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம்.

வனப்பாதுகாப்புப் பணியில், துறை அதிகாரிகளின் உத்திரவுகளுக்கு ஏற்ப, எந்தவித பணிப்பாதுகாப்பும் அற்ற நிலையிலும் கூட நாங்கள் சிரத்தை யோடு பணி செய்துவருகிறோம். வேட்டைத்தடுப்புக் காவலர்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பணிவரன் முறை செய்வது போல, எங்கள் பணியினையும் வரன் முறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம்.

வேட்டைத்தடுப்பு காவலர்களாகிய எங்களை வெளி முகமைக்கு மாற்றாமல், தொடர்ந்து தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us