sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை

/

ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை

ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை

ஈரோடு எல்லையோர மலை கிராமங்களில் நக்சல் தடுப்பு பிரிவினர் தேடுதல் வேட்டை


ADDED : மே 09, 2024 06:23 AM

Google News

ADDED : மே 09, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கர்நாடகா மாநில எல்லை பகுதியில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இதையடுத்து புதிய நபர்கள் நடமாட்டம், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து பல்வேறு பிரிவுகளாக போலீசார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில எல்லை பகுதிகளில், தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கர்நாடகாவில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளது. மாநில எல்லையோரங்களில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநில எல்லையை ஒட்டிய, ஈரோடு மாவட்ட பவானிசாகர் அடுத்த மங்களப்பட்டி கிராமம் கர்நாடகா மாநிலத்துக்கும், நீலகிரி மாவட்டத்துக்கும் எல்லைப்புற பகுதியாக உள்ளது.

இப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், 11 பேர் கொண்ட குழுவினர், இரு நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி ஆசனுார், தாளவாடி, பர்கூர், கத்திரிமலை, பாலாறு உள்ளிட்ட கர்நாடகா மாநில எல்லையோர கிராமங்கள் வழியே, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதிரடி படையினர், தனியாக வழக்கம் போல் மாநில எல்லையோர கிராமப்புற பகுதிகளில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us