/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு
/
காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு
ADDED : அக் 14, 2025 02:27 AM
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த மூலனுார், முளையாம்பூண்டி பகுதியில், 4 கி.மீ., துாரத்துக்கு காற்றாலை பயன்பாட்டுக்கான மின் கம்பங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முளையாம்பூண்டி, கருக்கம்பாளையம் புதுார், பட்டத்திபாளையம், வடக்குவலசு பகுதியை சேர்ந்த மக்கள், தாராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: காற்றாலை பயன்பாட்டுக்காக செய்யப்படும் பணியால், 5 கிராமங்களில் குடிநீர் குழாய், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே மாற்று வழியில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.