/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச வீட்டுமனை பட்டா கோரி முறையீடு
/
இலவச வீட்டுமனை பட்டா கோரி முறையீடு
ADDED : ஆக 13, 2025 05:17 AM
ஈரோடு: ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம், மா.கம்யூ., கட்சி, எல-வமலை உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு தாலுகா எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், பவானி லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், அந்தியூர் தாலுகா பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் அதிகமாக ஏழைகள், விவசாய தொழிலா-ளர்கள் வசிக்கின்றனர். வீடு, வீட்டு மனைகள் இல்லை. பல்-வேறு பகுதிகளில் வசிக்கும், 240க்கும் மேற்பட்டோர் தனித்தனி-யாகவும், கூட்டாகவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர், அந்தந்த தாலுகாவில் மனு வழங்கினோம். இது-வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறினர். வெகுநேரம் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்திருந்தவர்களிடம், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்தனர்.