sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி முறையீடு

/

மயானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி முறையீடு

மயானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி முறையீடு

மயானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி முறையீடு


ADDED : ஜூலை 01, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,பவானி நில மீட்புக்குழு, பவானி நகராட்சி, 12வது வார்டு பகுதி மக்கள், ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியது:

பவானி நகராட்சி, 12வது வார்டு மயான பகுதியை சுருக்கி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்துக்கு எதிராக கருத்தை பதிவு செய்தோம். மயான பகுதியில் ஏற்கனவே மின் மயானம், நுண் உர மையத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டு, பொது மயான பகுதி குறைவாக உள்ளது.

பவானியில் பெரும்பான்மையான சில சமுதாயத்தினர், உடல்களை மின் மயானத்தில் எரிக்க மாட்டார்கள். பொது மயானத்தில் அடக்கம் செய்வார்கள். மயானத்தை சுருக்கிவிட்டால் அவர்கள் பாதிக்கப்படுவர். மயான காம்பவுண்ட் சுவரை ஒட்டி, குடியிருப்பு வீடுகள் உள்ளன. 27வது வார்டு கழிவு நீரை இங்கு கொண்டு வருவதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும். யாரும் குடியிருக்க இயலாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முன், மக்களிடம் நகராட்சி எவ்வித கருத்தும் கேட்கவில்லை. தற்போது முழு மயானத்தையும் ஆக்கிரமித்து, சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கி உள்ளனர். அத்திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் மயான இட பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், இத்திட்டத்தை மயான பகுதியில் செயல்படுத்துவதை தவிர்த்து, வேறிடத்தில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us