sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடை, மயானம் ஆக்கிரமிப்பு நீர் வளத்துறையிடம் முறையீடு

/

ஓடை, மயானம் ஆக்கிரமிப்பு நீர் வளத்துறையிடம் முறையீடு

ஓடை, மயானம் ஆக்கிரமிப்பு நீர் வளத்துறையிடம் முறையீடு

ஓடை, மயானம் ஆக்கிரமிப்பு நீர் வளத்துறையிடம் முறையீடு


ADDED : அக் 09, 2024 12:51 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓடை, மயானம் ஆக்கிரமிப்பு

நீர் வளத்துறையிடம் முறையீடு

ஈரோடு, அக். 9-

ஓடை, மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, ஈரோடு பொதுப்பணித்துறை மற்றும் நீர் வளத்துறை செயற்பொறியாளரிடம், மக்கள் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:

அவல்பூந்துறை அருகேயுள்ள ராட்டைசுற்றி பாளையம், ராட்டைசுற்றி பாளையம் காலனி, சென்னிமலைபாளையம், கொத்துகாட்டு சாலை பகுதியில், 700க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். குரங்கன் ஓடை, அனுமன் நதியை ஒட்டி, அரிஜன காலனி மயானம் அமைந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள சிலர், அனுமன் நதி, ஒடையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழை காலங்களில் மழை நீர், ராட்டைசுற்றி பாளையம், ஆதிதிராவிடர் காலனிக்குள் புகுந்து விடுகிறது. தவிர குரங்கன் ஓடை அணைக்கட்டு பாசனத்துக்கு செல்லும் தண்ணீர், மயானத்தின் நடுவே பாய்ந்து, மயானத்தின் பரப்பளவை பெரும்பகுதி குறைத்துவிட்டது.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் தந்த தநிலையில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சர்வேயரை அழைத்து வந்து, அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை தாசில்தார் உறுதி செய்தார்.

நீர் வளத்துறைக்கு, 2023 ஜூன் 23ல் கடிதமும் இதுகுறித்து, வருவாய் துறை சார்பில் அனுப்பி கலெக்டர் ஆய்வு செய்தார். அதன் பிறகும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற, மயானத்துக்கான இடத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us