/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி
/
நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி
ADDED : ஏப் 18, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழக
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, கவுன்சிலர்
பதவி மசோதா நிறைவேற்றி நியமன அடிப்படையில் செயல்படுத்த அறிவித்த
முதல்வருக்கு, ஈரோடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை
நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜரத்தினம் நன்றி
தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: இந்த மசோதாவால்
நுாற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் வாய்ப்பு
கிடைக்கும். அவர்களின் குரல் உள்ளாட்சிகளில் ஒலிக்கும். இதன் மூலம்
தாங்கள் வசிக்கும் சொந்த ஊரில் மரியாதை உயரும். முதல்வருக்கு நன்றி
தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.