/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு
/
வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு
வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு
வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு
ADDED : நவ 06, 2025 01:34 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்க, ஈரோடு அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 10 காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.
மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழில் பழகுனர் காலி இடங்களுக்கு அப்ரன்டிஸ் தேர்வு செய்ய உள்ளனர். பயிற்சியாளர்கள், தங்களது மதிப்பெண் சான்று, என்.டி.சி., சான்று, மொபைல் எண், இமெயில் ஐ.டி., - ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரில் கொண்டு வந்து, தொழில் பழகுனர் பயிற்சியில் பயன் பெறலாம். கூடுதல் தகவலை, 94433 74133, 94424 94266 என்ற எண்களில் அறியலாம்.

