ADDED : ஜூலை 21, 2026 04:26 AM
கோபி; கோபி, வேட்டைக்காரன் கோவில் அருகே இந்-திரா நகரில் உள்ள செங்குட்டை ஏரியில், படகு இல்லத்துடன் கூடிய சிறுவர் பூங்கா உள்ளது. இயற்கையான சூழலை கொண்டுள்ள சிறுவர் பூங்-காவை, கோபி யூனியன் நிர்வாகம் முறையாக பராமரிப்பு செய்யாததால், விளையாட்டு உபகர-ணங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சிறுவர் வருகை குறைந்து, சுற்றுலா பயணிகளின் வரு-கையும் குறைந்து வருகிறது. இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஏரி பூங்காவை பராமரிக்க, கோபி யூனியன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து யூனியன் அதிகாரி ஒருவர் கூறு-கையில், 'ஏரியில் தேவையற்ற செடி மற்றும் கொடிகளை வெட்டி அகற்றி, 3.70 லட்சம் ரூபாயில் பராமரிக்க, மதிப்பீடு தயாரித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளோம். புதிய விளை-யாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்' என்றார்.
