ADDED : மார் 30, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:மயிலாடுதுறையில்
இருந்து ஈரோட்டுக்கு, சரக்கு ரயிலில், 2,௦௦௦ டன் நெல் நேற்று வந்தது.
ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் சுமை தொழிலாளர்கள் ஏற்றி
அனுப்பினர். நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து
தனியார் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்பட்ட
பின், பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு
வினியோகிக்கப்படும்.

