sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல்

/

2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல்

2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல்

2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல்


ADDED : நவ 09, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:''ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு, 2 லட்சம் முதல், 2.40 லட்சம் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படுகிறது,'' என, ஈரோடு மாவட்ட கால்நடை துறை துணை இயக்குனர் பிரிசில்லா மாலினி நிக்கல்சன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஊட்டி, ஒசூர், ஒரத்தநாட்டில் உறை விந்து குச்சி சேமித்து பராமரிப்பு மையம் செயல்படுகிறது. ஈரோட்டில் உறை விந்து குச்சி சேமிப்பு மையம் செயல்படுகிறது. ஈரோடு மையத்தில், ஜெர்சி கிராஸ், எச்.எப்., கிராஸ் வெள்ளை, கருப்பு, பிரவுன், கருப்பு வெள்ளை, ஜெர்சி துாய விந்து குச்சி, சிவப்பு சிந்து மற்றும் பாரம்பரிய இனமான பர்கூர், காங்கேயம் இன விந்துகளும் சேகரித்து, கருவூட்டலுக்கு வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த, 2020 கணக்கெடுப்பின்படி, 3.24 லட்சம் பசு, 82,000 எருமைகள் உள்ளன. செயற்கை கருவூட்டல் ஆண்டுக்கு ஆண்டு சிறிது வேறுபட்டாலும், 2.10 லட்சம் முதல், 2.40 லட்சம் கால்நடைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கருவூட்டப்படுகிறது.

பர்கூர் இன மாடுகளுக்கு கருவூட்டல் அந்தியூர், பர்கூர் உட்பட சில பகுதியில் மட்டுமே அதிகம். காங்கேயம் இனங்களுக்கு அதிகமாக கருவூட்டப்படுகிறது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us