ADDED : நவ 13, 2025 01:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமையில் இன்று (13) ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தர இருந்தனர். அவருடன், 18 எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சேர்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், பிற பணிகளை ஆய்வு செய்ய இருந்தனர்.
இந்நிலையில் நிர்வாக காரணத்தால் இன்றைய வருகை ரத்து செய்யப்பட்டு வரும், 20ல் ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர். அன்று, வளர்ச்சி திட்டப்பணிகளை புலத்தணிக்கை செய்ய உள்ளனர்.
