/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை, சுமை துாக்கும் பணியாளர்களுக்கு உதவி
/
துாய்மை, சுமை துாக்கும் பணியாளர்களுக்கு உதவி
ADDED : அக் 31, 2024 06:27 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், முத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட, துாய்மை பணியாளர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உத-விகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முத்துார் பேரூர் செயலர் குப்புச்சாமி தலைமை வகித்தார். பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், 57 பேர், சுமை துாக்கும் தொழிலாளர், 12 பேர் என மொத்தம், 69 பேருக்கு சீரூடை, தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை செய்தித்-துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். முத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன், மாவட்ட துணை செயலாளர் முத்-துக்குமார், வெள்ளக்கோவில் ஒன்றிய செய-லாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முருகா-னந்தம், முத்துார் பேரூராட்சி துணைத்தலைவர் அப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

