/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்
/
எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்
எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்
எட்டும் துாரத்தில் ஏ.டி.எம்., மையம்; செயல்படாததால் 8 கி.மீ., பயணம்
ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
டி.என்.பாளையம்: டி.ஜி.புதுார் அருகே கே.என்.பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது.
இந்த இயந்திரம் சில மாதங்களாக செயல்பாடற்று உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கே.என்.பாளையத்தில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். எங்களுக்கு பண பரிவர்தனை செய்ய வசதியாக இந்த ஏ.டி.எம்., மையம்தான் உள்-ளது. ஆனால், பல மாதங்களாக இயந்திரம் வேலை செய்யாமல் முடங்கியுள்ளது. இதனால், 8 கி.மீ., தொலைவில் உள்ள டி.ஜி.புதுார் நால்ரோட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. அவசர தேவைக்கு பணம் எடுக்க முடிவதில்லை. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் வங்கியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இவ்-வாறு மக்கள் கூறினர்.

