sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

/

நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபகரித்த உறவினர் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


ADDED : டிச 24, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: உறவினர் அபகரித்த நிலத்தை மீட்டுத் தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.

ஈரோடு மாவட்டம் கோபி, வரப்பாளையத்தை சேர்ந்தவர் சின்-னம்மா, 80; நேற்று காலை கலெக்டர் அலுவலக, கூட்ட அறை அருகே மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார், மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, மூதாட்டியை வெளியே அழைத்து சென்றனர். சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:கோபி அருகே துறையம்பாளையம் புதுாரை சேர்ந்த என்னை, வரப்பாளையத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். கணவருக்கு கள்ளிப்பட்டியில், 10 ஏக்கருக்கு மேல் விளைநிலம் உள்ளது. இதில் உறவினரான ஒருவர், வீடு கட்டுவதற்காக, 10 சென்ட் இடம் மட்டும் கேட்டதால், நிலத்தை எழுதி கொடுத்தேன். ஆனால் பத்திரத்தில், 2 ஏக்கர் நிலத்தை எழுதி கொண்டது தற்-போதுதான் தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய் துறையின் பல்-வேறு அதிகாரிகளிடம் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி, தனது நிலத்தை மீட்டுத்-தர வலியுறுத்தி, தீக்குளிக்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மனுவை பெற்ற போலீசார், கலெக்டர் அலுவலகத்தில் வழங்-கினர்.






      Dinamalar
      Follow us