/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
/
ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 28, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை : பெருந்துறை யூனியன், விஜயபுரி ஊராட்சியில் எதிர்வரும் லோக்சபா தேர்தலில், அனைவரும் தவறாது ஓட்டளிக்க வலியுறுத்தி, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, இறுதியில் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. நுாற்று-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.