ADDED : டிச 26, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, அ.தி.மு.க., சார்பில், அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களின் குழந்தைக-ளுக்கு, 'பேபி கிட்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சுப்ரீம் கோர்ட் வக்கீல் சுப்பிரமணியம் தலைமையில், 30க்கும் மேற்பட்-டோருக்கு வழங்கினர். முன்னதாக அந்தியூர் கார் ஸ்டாண்ட் அருகில் நடந்த விழாவில், 50க்கும் மேற்பட்டோருக்கு அன்ன-தானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளில் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குருராஜ், ஒன்றிய பொருளாளர் தவசி-யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

