/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவன் திடீர் சாவு மனைவி போலீசில் புகார்
/
கணவன் திடீர் சாவு மனைவி போலீசில் புகார்
ADDED : டிச 26, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அய்யாதுரை வீதியை சேர்ந்தவர் சாகித் ஷேக் அலாவுதீன், 29; இவரின் மனைவி ஷம்ரீனா, 22; தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த, 24 மதியம் பெரியசேமூர் வேலா நகரில் நண்பர் சம்சாத் வீட்டின் வெளியே பைக்கில் சாகித் உட்கார்ந்திருந்தார். அப்போது மயங்கி விழுந்தவரை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து சென்-றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மனைவி ஷம்ரீனா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

