sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை கோலாகலம்

/

மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை கோலாகலம்

மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை கோலாகலம்

மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை கோலாகலம்


ADDED : ஜூன் 08, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் நேற்று கொண்டாடினர். புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில், ஆயிரக்கணக்கானோர் தொழுகை செய்தனர்.

இதேபோல் ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பெரிய மசூதி, காவேரி சாலையில் கப்ருஸ்தான் மசூதி, புது மஜீத் வீதி சுல்தான்பேட்டை மசூதி மற்றும் பி.பெ.அக்ரஹாரம் ஈதுகா மைதானம், தாருஸ் ஸலாம் மசூதி, அபூபக்கர் மசூதி, மஸ்ஜிதே தாய்யிபா, அல் முனீர் மசூதி, ரயில்வே காலனி மஸ்ஜிதே அல் அன்சார் மசூதி, கனராவுத்தர்குளம் ஜாமிஆ மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி, ஓடைப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, திருநகர் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகர், வளையக்கார வீதி, சங்குநகர், நாடார்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத்நகர், கேஏஎஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் மசூதிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் என, 99 இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத்தை ஒட்டி, 14 இடங்களில் குர்பானி இறைச்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us